மதியே .. ! வா...!! உன்னை அடையாளப்படுத்துகின்றேன் வ.... வா...!!!

மதி என்ன என்னாங்க... ?

கொஞ்சம் புரியாமத்தான் கேட்கின்றேன்...!

மதியென்னா  நிலவு..... சரி அறிவு... சரி திங்கலேன்னே வைத்துக் கொள்வோம். அதென்ன 'வைத்துக் கொள்வோம்' என்று கேட்கிறீர்களா? மதியென்னா   திங்கள் என்றுதானே பொருள்.

சரி திங்களுக்கு தானே வெளிச்சம் உண்டா...? அது தினமும் ஒரே சைசிலே வருமா? கொஞ்ச நாள் வளரும்.. கொஞ்ச நாள் தேயும்..... பௌர்ணமியப்போ கொஞ்சம் வெளிச்சம் ஜாஸ்தியா இருக்கும். அதுவும் மேக மூட்டம் இல்லமே இருந்தா..!!

திங்களுக்கு மனுஷன் போய் வர்றா காலம் என்னிக்கோ ஆரம்பமாய்டிச்சு..... அது ரொம்ப கிட்டக்க இருக்கு.....

சாதாரண கண்ணாலே பாக்கலாம்... அதுவும் நேரடியா ... ரொம்ப நேரம் பாக்கலாம்..!

சரி மதிக்கு எங்கிருந்து பவர் கிடைக்குது...?

சிம்பிள்... ஞாயிறு வேணும்..


ஆதாங்க  நம்ப ஆளு சூரியன் ஆப்சென்ட் ஆனாதான் திங்கள் தெரியும். சூரியன் வருகின்ற போது ..? சுத்தமா வாய்டுதான். சூரியனே  வெறும் கண்ணாலே நேரடிய பாக்க முடியுமா...? சத்தியமா முடியாதுங்க !!

ஞாயிறு வந்தாத்தான் எல்லோருக்கும் பொழுது விடியுது. பொழப்பு நடக்குது. அது சரி திங்கள் வரும்போதும் ஒரு விதமான பொழப்பு நடக்குது.. அதே மறுக்க முடியாதில்லே ...!! நாட்டினுடைய ஜனத் தொகை எந்த சமயத்திலே கூடுது...?

ஞாயிறுலே திங்கள் கூட தெரியும். ஆனா திங்கல்லே ஞாயிறு தெரியாது.

ஆக மதியை அடையாளப்படுத்துறது யாரு? சூரியன்தானே..? சூரியன் இல்லாமே மதிக்கு எப்படி பேர் வரும்... ? என்ன பெருமை...?? 

சூரியன் தினமும் வரும்... வளர் அல்லது தேய் கிடையாது. சூரியன்தான் அப்பா... சூரியனே நெருங்க முடியுமா...? சுட்டெரிச்சு சாம்பலக்கிடாது.... ?

அட சந்திரா... ! கொஞ்சம் கூட்டி கழித்துப் பார்த்தல் கணக்கு புரியும்...!!

(கொஞ்சம் சீரியசியலிருந்து விலகி.....)

Comments

Anonymous said…
ஆகா இப்படியும் கூடவா சிந்திப்பீர்கள். ஆனால் லாஜிக்கான விடயத்தை சுருக்கமாக, அழகாக கூறிவிட்டீர்கள். அருமை
Unknown said…
ஜோ'திடத்தில் மனோகாரகன் சந்திரன் என்பார்கள்..சந்திரனின் வெளிச்சம் கூடிக் குறைவது போல..மனதின் திடமும் அடிக்கடி மாறுவதால்!

நன்று..வாழ்த்துக்கள்!
இன்றைய மதி நிறைந்த நன்னாளில்
மதியமும் , ஞாயிறும் பற்றிய சிந்தனைகள் சிறப்பு .. பாராட்டுக்கள்..
@ இக்பால் செல்வன் said...

//ஆகா இப்படியும் கூடவா சிந்திப்பீர்கள். ஆனால் லாஜிக்கான விடயத்தை சுருக்கமாக, அழகாக கூறிவிட்டீர்கள். அருமை//

முதலில் தங்கள் முதல் வருகைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிந்தனைக்கு வேண்டிய அடிப்படை அம்சம் ஒப்பு நோக்கலும், வேறுபடுத்தலும் தவிர வேறு ஒன்றுமில்லை.

தங்கள் பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்.

@ரமேஷ் வெங்கடபதி said...

//ஜோ'திடத்தில் மனோகாரகன் சந்திரன் என்பார்கள்..சந்திரனின் வெளிச்சம் கூடிக் குறைவது போல..மனதின் திடமும் அடிக்கடி மாறுவதால்!//

இது உங்கள் வழக்கமான 'டச்'

நறுக்கென்ற கருத்துக்கு நன்றி பல..
@இராஜராஜேஸ்வரி said...

//இன்றைய மதி நிறைந்த நன்னாளில்
மதியமும் , ஞாயிறும் பற்றிய சிந்தனைகள் சிறப்பு .. பாராட்டுக்கள்..//

உலகிற்கு மதியும் வேண்டும்.. ஞாயிறும் வேண்டும்...
இன்று முழு மதி நாள்..
பதிவு உங்கள் வாழ்த்தை பெற்ற நன்னாள்.
sury siva said…
இன்னா தத்துவம் !! இன்னா தத்துவம் !!

அப்படியே புல்லரிக்குது சாரே !!

கோர்ட் எல்லாமே லீவா ?

ஹாப்பி நியூ இயர்.

சுப்பு தாத்தா @ சுப்பு ரத்தினம்.
//இன்னா தத்துவம் !! இன்னா தத்துவம் !!
அப்படியே புல்லரிக்குது சாரே !!//

என்ன தாத்தா..

வஞ்சப்புகழ்ச்சியா....?
கோர்ட் எல்லாமே லீவா ?

ஆமா தாத்தா ... கிருஸ்துமஸ் ஹாலிடே.
//ஹாப்பி நியூ இயர். //

தேங்க்ஸ் தாத்தா....

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஹாப்பி நியூ இயர், 2013.