எப்படி இருந்தாலும்.......

மக்கள் பலசமயங்களில் நியாயமில்லதவர்களாக, 
தவறானவர்களாக, சுயநலம் கொண்டவர்களாக உள்ளனர்.
எப்படி இருந்தாலும், அவர்களை மன்னித்து விடு.

நீங்கள் இரக்க குணம் படைத்தவராக இருப்பின்,
மக்கள் உங்களை தன்னலம் கொண்டவர் என்றும்,
உள்நோக்கம் கொண்டவர் என்றும் குறை கூறுவார்;
எப்படி இருந்தாலும், இரக்கத்துடனே இரு.

நீங்கள் வெற்றிகரமானவராக இருப்பின்,
நீங்கள் சில தவறான நண்பர்களையும்,
சில சரியான நண்பர்களையும் வெற்றி காண்பீர்கள்; 
எப்படி இருந்தாலும், வெற்றி பெறு.

நீங்கள் நேர்மையானவராக,
வெளிப்படையானவராக இருப்பின், 
மக்கள் உங்களை ஏமாற்றக் கூடும்; 
எப்படி இருந்தாலும், நேர்மையானவராக, 
வெளிப்படையானவராக இரு.

நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியதை, 
ஒருவன் ஒரே இரவில் அழித்து விடலாம்; 
எப்படி இருந்தாலும், உருவாக்கிக் கொண்டிரு.

நீங்கள் பிரச்சனையற்றவராக,
மகிழ்ச்சியானவராக இருப்பதாக தெரிந்தால்,
அது மற்றவர்களை பொறாமைப்பட வைக்கும்;
எப்படி இருந்தாலும், மகிழ்ச்சியாக இரு.

இன்று நீங்கள் செய்யும் நல்லதை,
மக்கள் நாளை மறந்து விடுவர்; 
எப்படி இருந்தாலும், நல்லது செய். 
எப்படி இருந்தாலும், உன்னால் முடிந்த சிறந்தது 
எதுவோ அதை உலகிற்கு கொடு.

இறுதி பகுப்பாய்வு முடிவு என்பது
உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேதான்  உள்ளது;
அது எப்படி இருந்தாலும் உங்களுக்கும் 
அந்த மற்றவர்களுக்கும் இடையே இல்லை 
என்பதை அறியுங்கள். 

- அன்னை தெரசா.


Comments

எப்படி இருந்தாலும் கமென்ட் போடுவோம்..
மன்னிப்பது உலகில் எலலாவற்றிலும் சிறந்தது...

அருமையான படைப்பு... வாழ்த்துக்கள்..
அன்னை தேரேசாவின் குணங்கள் பிரமிக்க வேண்டிய விஷயங்கள்..



இவரின் குணங்கள் இனிவரும் உலகில் எதிர்ப்பார்ப்பது மிகவும் படினம்...
@கவிதை வீதி... // சௌந்தர் //

//மன்னிப்பது உலகில் எலலாவற்றிலும் சிறந்தது...அருமையான படைப்பு... வாழ்த்துக்கள்.//

Nanri..
@ கவிதை வீதி... // சௌந்தர் //
//அன்னை தேரேசாவின் குணங்கள் பிரமிக்க வேண்டிய விஷயங்கள்..
இவரின் குணங்கள் இனிவரும் உலகில் எதிர்ப்பார்ப்பது மிகவும் படினம்..//

unmai...
@ சண்முகம்
//எப்படி இருந்தாலும் கமென்ட் போடுவோம்.//

சண்முகம் கமென்ட் போடுவாரோ.. மாட்டாரோ...?!!
எப்படி இருந்தாலும் பதிவு போடுவோம்...
இதை நீதி தேவன் தேவிகள் படித்து நடிப்பீர்களாக?
@ வலிபோக்கன்
//இதை நீதி தேவன் தேவிகள் படித்து நடிப்பீர்களாக?//

நடிப்பீர்களாகவா ? அல்லது நடப்பீர்களாகவா ?
@ வலிபோக்கன்
//இதை நீதி தேவன் தேவிகள் படித்து நடிப்பீர்களாக?/

பின்னூட்டதிற்கு நன்றி ..
aalunga said…
நல்லனவற்றையே செய்ய சொல்லும் கருத்து செறிவு மிகுந்த வரிகள்
@ ஆளுங்க (AALUNGA)
//நல்லனவற்றையே செய்ய சொல்லும் கருத்து செறிவு மிகுந்த வரிக//

nanri...
நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியதை,
ஒருவன் ஒரே இரவில் அழித்து விடலாம்;
எப்படி இருந்தாலும், உருவாக்கிக் கொண்டிரு.// நிதர்சன உண்மை..
ஒரு தரமான பதிவு வாழ்த்துக்கள்..
முதன் முதலாக உங்கள் தளம் வருகிறேன்.. நன்றாக பயனுள்ளதாக இருக்கிறது..

நன்றி..
@ !* வேடந்தாங்கல் - கருன் *!

//முதன் முதலாக உங்கள் தளம் வருகிறேன்.. நன்றாக பயனுள்ளதாக இருக்கிறது..//

தங்கள் வரவு நல்வரவாகுக...!
நன்றி..
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ஒரு தரமான பதிவு வாழ்த்துக்கள்.

பின்னூட்டதிற்கு நன்றி..
@ !* வேடந்தாங்கல் - கருன் *!

//நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கியதை,
ஒருவன் ஒரே இரவில் அழித்து விடலாம்;
எப்படி இருந்தாலும், உருவாக்கிக் கொண்டிரு.//

எவ்வளவு அபாயகரமான அதே நேரத்தில் ஆழமான வரிகள் பார்த்தீர்களா ?

ஒருவன் பல காலமாக நிறைய கனவுகளுடன் உருவாக்கியதை மற்றொருவன் ஒரே இரவில் அழித்து விட்டால் அவன் என்ன ஆவான்?
இந்த வலியை நான் அடைந்து இருக்கின்றேன்..! இருப்பினும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன்..
http://jayarajanpr.blogspot.com/

இந்த வலைப்பதிவையும் வாசிக்க அழைக்கின்றேன்..
நேர்மை, மன்னித்தல், இரக்க உணர்வு, என அன்னை திரேசாவின் அறிவுரைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
Unknown said…
மொத்தத்தில் இயல்பாய் இரு! செய்வதை தொடர்ந்து செய்! என்பதே இதன் கருத்து!

உற்சாகப் பதிவுகளைத் தொடரவும்!