பாட்டில் மாறிப்போச்சு; பொண்ணுக்கு புண்ணாச்சு.

மேற்கு வங்கத்தில் உள்ளது முர்ஷிடபாத் மாவட்டம். இங்குள்ள லால்பாக் எனும் ஊரில் அரசு உட்கோட்ட மருத்துவமனை உள்ளது. இதில் சிக்ஹா பீவி எனும் பெண்மணி பிரசவத்திற்காக அக்டோபர் 31-ஆம் தேதி பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்டார். இரண்டு தினங்களில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவமனை நிருவாகம் கூறியது. அதே நேரத்தில் குழந்தை உயிருடன் பிறந்தாக சிக்ஹா பீவியின் உறவினர்கள் கூறினர்.

இதற்கிடையில்தான் அந்த பயங்கரம் நடந்தது. குழந்தை பெற்ற அப்பெண்மணியின் உள்ளுறுப்பை கிருமி நாசினி கரைசல் (டெட்டால், சவாலான் போன்று) கொண்டு கழுவுவதற்கு பதிலாக, அசிட் ஊற்றி கழுவி உள்ளனர், மருத்துவமனை பணியாளர்கள். 
இதனால் அவளது உள்ளுறுப்பு முழுவதும் வெந்து போனது. அத்துடன் வெளிக் காயங்களும் ஏற்பட்டன. 
உறவினர்கள் கொதித்துப் போயினர். எனவே இது குறித்து விசாரிக்க உடனடியாக மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பிரேந்திரா குமார், மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார். அக்குழு, இந்த சம்பவம் உட்கருத்துடன், வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்றும், அப்பெண்மணியை கழுவிய பணியாளர்கள் தவறுதலாக அசிட் ஊற்றி கழுவி உள்ளனர் என்றும், கிருமி நாசினியின் நிறமும், ஆசிடின் நிறமும் ஒன்றாக இருந்த காரணத்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்றும், இந்த பாட்டில்கள் மாறிவிட்டன என்றும், மருத்துவமனையை பெருக்குபவர்தான்  தவறுதலாக அந்த இடத்தில் ஆசிட் பாட்டிலை வைத்திருக்க வேண்டும் என்றும், மேலும் விசாரித்து வருவதாகவும் கூறி உள்ளனர்.
ஆசிட் உடம்பிலே பட்டாலே தாங்காது. உள்ளுறுப்பிலே பட்ட எவ்வளவு வேதனை ?

Comments

Unknown said…
பெரும்பாலான விபத்துகள் கவனக்குறைவாலேயே ஏற்படுகின்றன! கவன் மேம்பாடு கடை பிடிப்போம்!