வயிறு வலித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல !

ணவர்கள்  எந்த  தவறு  செய்தாலும் 
சொல்லிக்காட்டியே   வெறுப்பேற்றுவார்கள்
மனைவிகள், அவர்களை  கல்யாணம்  செய்ததை  தவிர!
________________________________________________________________________________

நவீன நியூட்டனின் முப்பெரும் விதிகள்

ஒரு பசு நடந்து சென்று கொண்டிருந்தது.
அதை நியூட்டன் பிடித்து நிறுத்தினர். அது நின்று விட்டது. இதன் வாயிலாக அவர் தனது முதல் விதியை கண்டுபிடித்தார். அதாவது..
"ஒரு பொருள் நகர்ந்து கொண்டே இருக்கும், அதை நிறுத்தும் வரை!"

இதையடுத்து அவர் பசுவின் மீது FORCE-ஆக உதைத்தார். அது உடனே "MA"! என்று கத்தியது. இதன் வாயிலாக அவர் தனது இரண்டாம் விதியை கண்டு பிடித்தார். அதாவது, "F=MA!!"


சிறிது நேரம் கழித்து பசு அதே FORCE-உடன் நியூட்டனை உதைத்து. இதன் வாயிலாக அவர் தனது மூன்றாம் விதியை கண்டுபிடித்தார். அதாவது,
"ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான மற்றும் எதிரான மறு செயல் உண்டு!!"
________________________________________________________________________________

உலகில் மூன்று வகையான மனிதர்கள் உண்டு.

சிலர் தனியாக இருந்து, அதிசயங்களை கண்டு மகிழ்வார்கள்;
சிலர் காதலியுடன் இருந்து, அதிசயங்களை நிகழ்த்துவார்கள்;
மீதம் இருப்பவர்கள் திருமணம் செய்து கொண்டு, நடக்கக் கூடாதது ஏதும் நடந்து விடவில்லையே என்று அதிசயப்பட்டுக் கொள்வார்கள்.
________________________________________________________________________________


ஒருவர் இறந்து விட்டார். என்ன பாவம் செய்தாரோ, நரகத்தில் தள்ளப்பட்டார். அவரை  பூதகணங்கள் முள் சவுக்கால் அடித்து தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்நேரம் அங்கு ஒரு வழக்குரைஞர் அழகான பெண்மணி ஒருத்தியுடன் உலவிக் கொண்டிருப்பதைப் பார்த்து மிகவும் எரிச்சலடைந்தார்.

உடனே, "இது அந்நியாயம்..., அக்கிரமம்...." என்று அப்பூதகணங்களிடம் கோபத்துடன் முறையிட்டார்.

அதற்கு அப்பூதங்கள், "இந்நரகத்தில் அப்பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை பற்றி கேள்வி கேட்க நீ யார்? " என்று கேட்டு அவரை மேலும் பலமாக சவுக்கால் அடித்தனர்.
________________________________________________________________________________


மனைவி : டார்லிங்.. இந்த கம்ப்யூட்டர் எனது கட்டளைகளுக்கு கீழ் படிய வில்லை....!
கணவன் : இதை என்ன உன் புருசன்னு நினைச்சிகிட்டு இருக்கியா டார்லிங்?
________________________________________________________________________________

தேர்வு முடிவுகளுக்குப் பிறகு..

பாசாகி இருந்தால்..

ஆசிரியர் : வகுப்பில் நான் என்ன சொல்லிக் கொடுத்தேனோ அதை அவன் உன்னிப்பாக கவனித்தான்..
தாய் : எல்லாம் கடவுளின் கருணை ....
தந்தை : அவனை யாருன்னு நினைச்சே... என் மகன் இல்லே...?
காதலி : சோ. ஸ்வீட்.. ஐ லவ் யு டா...
நண்பன் : வா பாருக்கு போவோம்!

ஒருவேளை பெயிலாகி இருந்தால்......

ஆசிரியர் : மரமண்டை... கிளாஸ்லே எதையும் கவனிக்கறதே இல்லே...
தாய் : எல்லாம் இந்த டி.வி., செல்போனாலே  வந்த வினை ....
தந்தை : உம்மகனுக்கு நீ ரொம்ப செல்லம் கொடுத்திட்டே..
காதலி : சரியான லூசு.. வாழ்கையிலே உனக்கின்னு ஒரு எய்மே இல்லையாடா?
நண்பன் : வா பாருக்கு போவோம்!
நீதி : "எல்லாம் மாறும் ஆனால் நட்பு அப்படியே இருக்கும்."
________________________________________________________________________________


சூப்பர் இகோயிசம்...

"நான் ஏன் அவனோட எழவுக்கு போகணும்.., என்னோட எழவுக்கு அவன் வர முடியாது என்கிறப்போ.. !"
________________________________________________________________________________


ஒரு சர்தார்ஜி ஒரு பிரச்சனைக்கு விடை கண்டுபிடிக்க அதை மீண்டும் மீண்டும் யோசித்து முடிவில் விடை தெரியாமல் மூளைக் கட்டி
வந்து செத்துப் போனார். அது என்ன அப்பேற்பட்ட பிரச்சனை?
"என் சகோதரிகளுக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கும் போது, எனக்கு மட்டும் ஒரே ஒரு சகோதரர் இருப்பது எப்படி?"
________________________________________________________________________________


சத்தியமான வரிகள்...

"சில சமயங்களில் தவறான ஆட்களை தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று கலங்காதீர்கள்,
ஏனென்றால், அப்படி அவர்களை தேர்ந்தெடுக்காது போயிருந்தால், உங்களுக்கு சரியானதின் மதிப்பு தெரியாமலே போயிருக்கும்."
________________________________________________________________________________


பிரம்மச்சாரி : நான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை.. எந்தப் பெண்ணைக் கண்டாலும் எனக்கு பயமாக உள்ளது.
சம்சாரி : சீக்கிரம் திருமணம் செய்து கொள். பிறகு பார்... ஒரே ஒரு பெண்ணை கண்டு மட்டுமே பயப்படுவாய். மற்ற பெண்களை
இரசிக்க  ஆரம்பித்து விடுவாய்.
________________________________________________________________________________

Comments

சார் கலக்கலான பதிவு...!! அந்த எமலோக காமெடி அருமை !!!!
சத்தியமான வரிகள்...

"சில சமயங்களில் தவறான ஆட்களை தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று கலங்காதீர்கள்,
ஏனென்றால், அப்படி அவர்களை தேர்ந்தெடுக்காது போயிருந்தால், உங்களுக்கு சரியானதின் மதிப்பு தெரியாமலே போயிருக்கும்."
__________________________________


உண்மைதான்.
நியுட்டன் விதிகளுக்கு இப்படியொரு விளக்கத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை நண்பா.

:))
இன்று என் வலையில்

அடக்கம் செய்யவா அறிவியல்?

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

காண அன்புடன் அழைக்கிறேன்.
//சார் கலக்கலான பதிவு...!! அந்த எமலோக காமெடி அருமை !!!!//

நன்றி திரு அசோக்குமார் சார்..
தொடர்ந்து கலக்குவோம் ...
@ Dr. R.Gunaseelan..

"சில சமயங்களில் தவறான ஆட்களை தேர்ந்தெடுத்து விட்டோமோ என்று கலங்காதீர்கள்,
ஏனென்றால், அப்படி அவர்களை தேர்ந்தெடுக்காது போயிருந்தால், உங்களுக்கு சரியானதின் மதிப்பு தெரியாமலே போயிருக்கும்."

//உண்மைதான்.//

தவறான ஆட்கள் தங்கள் சேர்ந்த ஆட்களையும் தவறானவர்களாக ஆக்கவும், காட்டவுமே முயற்சி செய்வர்.
முடிவில் அந்த ஆட்களை விட தங்கள் எவ்வளவோ நல்லவர்கள் என்றும் கட்டிக் கொள்வர்.
தவறானவர்கள் என்று ஒருகணம் தெரிந்தாலும், மறுகணம் அவர்களை விட்டு விலகிவிடுவதே நல்லது.
தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தால், முடிவு ..... கஷ்டம்தான்.. !
//அடக்கம் செய்யவா அறிவியல்?
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html
காண அன்புடன் அழைக்கிறேன்.//

"அறிவியல் கொண்டு
ஆக்கம் செய்யலாம்!
அணு உலை கொண்டு மக்களை
அடக்கம் செய்யலாமா?"

சிந்திக்க வேண்டிய வரிகள்..
//நியுட்டன் விதிகளுக்கு இப்படியொரு விளக்கத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை நண்பா.//

பதிவின் தலைப்பை நினவுகூருங்கள்...
//எமலோக காமெடி அருமை !!!!//

பூலோகத்தில் இழைத்த கொடுமை எமலோகத்தில் பிரதிபலிக்கிறது..