"National Law School" என்று அழைக்கப்படும் தேசிய சட்ட கல்லூரிகளில் சேருவது எப்படி?




சட்டக் கல்விக்கு முன் எப்போதையும் விட அண்மைக் காலத்தில் மவுசு கூடி உள்ளது... காரணம் படித்து முடித்த உடன் நீதிமன்றப் பணியை தொடங்கி விடலாம் . ஆனால் இதை விட தற்போது நிறைய நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கிறது. கை நிறைய சம்பளம் உண்டு. குறிப்பாக "National Law School" என்று அழைக்கப்படும் தேசிய சட்ட கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெறுபவர்களை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பெரிய சம்பளத்துடன் வசதியான மேல்தட்டு வாழ்கையும் வரவேற்கிறது. நிறுவன வேலை வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பட்டையை கிளப்புகிறார்கள். விரைவில் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒரு வழக்கிற்காக ஒரு முறை நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினால் இவ்வளவு ரூபாய் என்று பில் செய்கிறார்கள். (Charge for per Appearance in a case).

நுனி நாக்கு ஆங்கிலம், நடை, உடை, பாணியில் ஒரு துணிச்சல் கலந்த துள்ளல், மனதில் கொள்ளை கொள்ளையாக நம்பிக்கை, சட்டப் புலமை ஆகிய இவை எல்லாவற்றையும் இந்த "National Law School" (சட்ட பள்ளிகள்) போதிக்கின்றன. அதாவது நமது நாட்டில் இவை மட்டும்தான் சட்டத்தை உள்ளபடியே கற்று கொடுக்கும் கல்லூரிகளாக செயல் படுகின்றன. வேறு சட்ட கல்லூரிகள் சரியாக நடப்பதே இல்லை. குறிப்பாக பெங்களூரில் சந்துக்கு ஒரு சட்ட கல்லூரி வீதம் நாற்பது தனியார் சட்ட கல்லூரிகள் உள்ளன. எதுவும் உருப்படி இல்லை. கல்லூரிக்கு போகமலே தேர்வு எழுத வசதி உண்டு. சட்டமே தெரியாமல் பட்டமும் பெற்று விடலாம். சரி விடுங்க ... அது எதுக்கு நமக்கு...?


நம்ம நாட்டில் 11 தேசிய சட்ட பள்ளிகள் உள்ளன. அவை வருமாறு:-


1. NLSIU, Bangalore.
2. NALSAR, Hyderabad.
3. NLIU, Bhopal.
4. WBNUJS, Kolkata,
5. NLU, Jodhpur.
6. HNLU, Raipur.
7. GNLU, Gandhinagar,
8. RMLNLU, Lucknow.
9. RGNUL, Patiala.
10. CNLU, Patna,
11. NUALS, Kochi.

இதில் சேர "CLAT (Common Law Admission Test)" எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மேற்கண்ட பள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். மொத்தம் 1400 இடங்கள் மட்டுமே உள்ளன. +2 தேர்வில் 55 சதவிகித மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ. 2500/-. ஒரு ஆண்டுக்கு சுமார் 2 லட்ச ரூபாய் செலவு ஆகும்.

இதை விட்டால், பூனாவில் உள்ள Symbiosis law school-லில் சேரலாம். இதற்கும் நுழைவு தேர்வு [SET (Symbiosis Enterance Test)] உண்டு. விண்ணப்ப கட்டணம் ரூ. 1500/. இதற்க்கு இடையில் டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (National Law University) சட்டப் பள்ளியில் சேர்த்து படிக்கலாம். இதற்கும் நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவு தேர்வுகளின் கேள்விகள் logical reasoning, legal reasoning, arithmetical reasoning, english, General Knowledge ஆகிய தலைப்புகளில் உள்ளது. கிட்ட தட்ட IAS தேர்வு போல் உள்ளது. நான்கு பதில்கள் கொடுக்கப்படிருந்தாலும், சட்டென்று பதில் டிக் செய்ய முடியாத அளவு கடினமானதாக உள்ளது. சென்னையில் நிறைய கோச்சிங் சென்டர் உண்டு. அதில் Sri Raman Law Academy கொஞ்சம் நல்ல பண்றாங்க.

ஆகா இந்த பள்ளிகளில் சேர்ந்து படித்தால் அந்த மாணவன் அல்லது மாணவிக்கு எங்கும் ஒரு பெருமை கூடவே ஒட்டிக்கொண்டு வரும். காரணம் முன் சொன்ன மாதிரி அவன் அல்லது அவளை அப்படி ஒரு ஒளி வட்டத்துடன் அங்கு தயார் செய்து விடுகிறார்கள்.

இந்த மாதிரி நம்ம தமிழ் நாட்டிலே இல்லையா என்று நீங்கள் ஆதங்கப்படுவது எனக்கு நல்ல புரியுது... இருக்கு. அது Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai நடத்துகின்ற "School of Excellence in Law" . இதுவும் தேசிய சட்ட பள்ளிகளுக்கு சவால் விடுகிற மாதிரி சட்டம் கற்று தருகிறார்கள். இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் உடனே வந்திருக்கும்.

அதாவது பசங்க ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட லா காலேஜ் அல்ல இது. அது சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள 'அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில்' நடந்த துரதிர்ஷ்ட வசமான சம்பவம். ஆனால் "School of Excellence in Law" என்ற சீர்மிகு சட்ட பள்ளி Tamil Nadu Dr. Ambedkar Law University வளாகத்திலேயே உள்ளது. இங்கு மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 80 மட்டும்தான். இந்திய மாணவர்கள் 70 பேர். NRI மாணவர்களுக்கு 10 இடம். அவ்வளவுதான்! இங்கேயும் படித்து முடித்தவுடன் வேலைக்கு வழி செய்து தரும் Placement cell உண்டு. எங்கே சேர நுழைவு தேர்வு இல்லை. +2 மதிப்பெண் அடிப்படையில் cut off தயாரிக்கப்பட்டு மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப் படுவார்கள். ஆண்டு கட்டணம் ரூ.60000/- வரும். முடிவில் B.A., B.L., (Hons.) பட்டம் கொடுப்பார்கள்.

(போன மாதம் இந்த Tamil Nadu Dr. Ambedkar Law University- இன் மாண்பமை துணை வேந்தர் (VC) பேராசிரியர் எஸ். சச்சிதானந்தம் அவர்களை சந்தித்து 'சட்ட பார்வை" இதழுக்காக நேர்காணல் செய்து அது இந்த ஜூன் இதழில் வெளியாகி உள்ளது. அந்த பக்கத்தை நீங்கள் மேலே பார்கிறீர்கள். )

இதற்க்கு அடுத்து தமிழக அரசு சட்ட கல்லூரிகளில் சேரலாம். Chennai, Madurai, Trichy, Tirunelveli, Coimbatore, Vellore, Chengalpattu ஆகிய இந்த இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. சேலத்தில் தனியார் சட்ட கல்லூரி உள்ளது.

புதுவையில் புதுவை அரசின் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி உள்ளது. இது புதுவை பல்கலை கழகத்துடன் சேர்ந்தது. சென்னையில் இருந்து ECR சாலையில் வரும்போது ஊருக்கு முன்னாடியே இந்த கல்லூரி வந்து விடுகிறது. இந்த கல்லூரி கொஞ்சம் அமைதியாக நடக்கிறது. இந்த ஊரிலேயே Balaji Law School என்று ஒரு தனியார் சட்ட கல்லூரியும் உண்டு. நல்ல நடக்குதா என்பது சந்தேகம். விவரங்கள் தெரியவில்லை.

எனவே சட்டம் படிக்க நினைப்பவர்கள் அல்லது அப்படி படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர்கள் முதலில் மேற்சொன்ன 11 சட்ட பள்ளிகளில் சேர்க்க முயற்சி செய்யலாம். கூடவே Symbiosis Law School மற்றும் National Law University, Delhi -யும் முயற்சிக்க வேண்டும். இதுக்கு எல்லாத்துக்கும் கொஞ்ச நாள் வித்தியாசத்தில் நுழைவு தேர்வு நடக்கும்.

அடுத்து இந்த பள்ளிகளில் இடம் கிடைக்காவிட்டால், சென்னை SOEL (School of Excellence in Law) முயற்சி செய்யலாம். அடுத்து புதுச்சேரி சட்ட காலேஜ். மற்ற காலேஜ் எல்லாம் இதற்க்கு அடுத்துதான்.

வாழ்த்துகள்.

பி. ஆர். ஜெயராஜன்.

Comments

Maximum India said…
உபயோகமான தகவல்கள்.

மிக்க நன்றி.
T.V.Krishnan said…
Dear Sir,
Is there any proposal for conducting part-time B.L for degree hoslders working in various offices/industries to upgrade their knowledge & also get a degree?.Why this scheme is stopped?.I am a degree holder in engineering working in a public sector at Tiruchy.What I must to to study law graduation?
T.V.Krishnan
வணக்கம் அய்யா !. நான் சட்ட கல்லூரியில் அடுத்த ஆண்டு சேர விருப்பபடுகிரேன் . என் சொந்த ஊர் ஈரோடு. எனக்கு திருநெல்வேலி கல்லூரியில் சீட் வேணும் !. அதக்கு நான் என்ன செய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க !.. நான் m.sc முடிக்க போறேன் .