இந்த அளவு பயங்கரமாக அலர்ஜி ஆகி இருப்பதை நீங்க பார்த்து உள்ளீர்களா?


வணக்கம்.

விவரம் தெரிஞ்சவங்ககிட்டே கிட்டே விளக்கம் கேட்டு இந்த பதிவு. கொஞ்சம் மருத்துவ அறிவு சம்பந்தமாக இருக்கும். அதே சமயம் அனுபவப்பட்டவங்க அட்வைஸ் செய்தாலும் நல்ல இருக்கும்.

மேட்டர் இதுதான். ஆனா இதயம் பலகினமாக உள்ளவங்க இந்த பதிவோட இணைக்கப்பட்டுள்ள காணொளியை (வீடியோ) பார்ப்பதற்கு முன் கொஞ்சம் ஆசுவாசப் படுத்தி உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்த காணொளியில் நீங்க பார்த்துகிட்டு இருப்பது என்னைத்தான். எனக்கு திடீரென்று ஒரு நாள் உதடு வீங்க ஆரம்பித்தது. சரி ஏதாவது பூச்சி அல்லது எறும்பு கடித்திருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நேரம் அதிகமாக அதிகமாக வீக்கமும் அதிகமாகியது. உதடு பார்க்கவே பயங்கரமான அளவிலே வீங்கிக் கொண்டே வந்தது. கொஞ்ச கொஞ்சமா கன்னம் ரெண்டும் வீங்க ஆரம்பித்தது. இப்படியே முகம் பூராவும் வீங்கி போச்சு.

உடனே தோல் டாக்டர் கிட்டே போனோம். அவர் இது ஏதோ அலர்ஜி போல் தெரிகிறது. இப்போ ஒரு அவிலும் பெட்னிசல் இன்ஜெக்சன் போடுறேன் என்று சொல்லி உடனடியாக போட்டார். citizian மாத்திரை எழுதி கொடுத்தார். அதே சாப்பிட்டு வந்து 3 நாள் கழித்து படிப்படியாக வீக்கம் குறைய ஆரம்பித்தது.

அங்கிருந்து ஒரு 10 நாள் போன பின்னாடி டாக்டர் சொன்ன மாதிரி எனக்கு ஒரு அலர்ஜி டெஸ்ட் செய்யப்பட்டது . அதில் தூசி மற்றும் மீன் கறி அலர்ஜி என்று அவர் சொன்னார். எனவே குறிப்பா தூசி பக்கம் போக வேண்டாம். மீன் தொடவே கூடாது. அதோட ஏதாவது காரணத்திலே தாங்க முடியாத மன உளைச்சல் அல்லது வேதனை ஏற்பட்டாலும் அது முக நரம்புகளை பாதித்து முகத்தை வீங்க செய்யலாம். எனவே கூடுமானவரை இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றார்.
இது மாதிரியே நானும் இருந்தேன். ஆனால் அடுத்த ஒரு வருசத்திலே மறுபடியும் முகம் வீங்கியது. அதே சிகிச்சை. இது இப்படியே தொடர் கதை ஆகியது.

டாக்டர் ஒரு நிரந்தர மருந்து சீட்டு (prescription) எழுதி கையிலேய கொடுத்திட்டார். அதில் முகம் வீக்கம் தெரிய ஆரம்பித்தவுடன் யாரையும் Avil and Decadran ஊஸி போட்டுக்க சொல்லி இருக்கிறார். அப்படியே பின்வரும் மாத்திரை சாப்பிட சொல்லியிருக்கிறார்.

Tab. Atarax 25 mg.
Tab. Lystea
Tab. Ebast 10 mg.
Tab. Sompras.
Tab. Wysolone 10 mg.

ஒரு வரம் பத்து நாள் நான் படர கஷ்டம் பாக்க ரொம்ப வேதனையாக இருக்கும். அந்த வீக்கம் அப்படியே இறங்கி கழுத்து பக்கம் வர்றப்போ என்னலே தண்ணி கூட குடிக்க முடியாது.

டாக்டர் இந்த மாதிரி அலர்ஜிக்கு நிரந்தர வைத்தியம் இல்லே என்று சொல்கிறார்? அலர்ஜி எது என்று தெரிந்த பிறகு அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். நானும் டாக்டர் சொன்ன மாதிரி விலகிதான் உள்ளேன். ஆனாலும் கொஞ்சம் தூசி அதிகம் உள்ள ரொம்ப நாள் புழங்காத இடம் என்றால் உடனடியாக வீக்கம் வந்து விடுகிறது.
விவரம் தெரிஞ்சவங்க வழிகாட்டினா ரொம்ப உதவியாக இருக்கும். இப்போ போன மாதம் எனக்கு முகம் வீங்கினப்போ வீடியோ எடுத்து blog-இல் போட சொல்லி இது தொடர்பா ஏதாவது கருத்து, ஆலோசனை, அட்வைஸ் வருதா என்று என் சிற்றப்பா மகன் பார்க்கச் சொன்னார்.
இந்த கானொளியில் காணப்படும் இடம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எங்க மாமனார் வீட்டு மேல்மாடி. பழைய சாமான்கள், லொடலொட கட்டில், அதன் மீது கிழிச்சு போன மெத்தை, பழைய பேப்பர், புத்தகம் எல்லாம் போட்டு வைக்கிற இடம். மேலே அச்பெச்ட்டஸ் கூரை. விட்டலச்சர்யா படத்தில் வர்ற பழைய குகை மாதிரி எங்கேயும் சிலந்தி வலை. நான் சென்னை போன எனக்கு அவங்க தங்க கொடுக்கிற இடம் இதுதான். அவ்வளவு பாசம்! ராத்திரி போய் தங்கி அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தல் என் முகம் இப்படி வீங்கி போச்சு. மதியம் ஆக ஆக அதிகம் ஆகி விட்டது. அதை அப்படியே என் சோனி டிஜிட்டல் காமிராவில் படம் பிடித்து இங்கே உங்களுக்கு காட்சி படுத்தி உள்ளேன்.

Comments

kicha said…
During my masters, one of my friends had a strange allergy. It affected one half of his head. He was treated by a doctor in Madurai. He is now a professor at Hyderabad central university. If you like, I can give his contact e-mail.
//He is now a professor at Hyde/rabad central university. If you like, I can give his contact e-mail.//

Dear Friend Kicha,

Thanks for your immediate response.

It would be very helpful if you give the Doctor's e-mail.... Please..
kicha said…
Dear sir,

I don't know the address of the doctor. I can give the contact of the Professor at University of Hyderabad. You can contact him and get the address of the doctor. If it is OK, please let me know.
No problem friend.

We have been searching such a doctor who suggests the suitable treatment....
kicha said…
his e-mail ID is vbsc@uohyd.ernet.in
Anonymous said…
Nechayamaaka Palankidaikkum nanpare.
avar kunamadaiya piraarthippom.

anpudan
maharaja
//Kicha - his e-mail ID ...//

Thanks friend for your valuable help. I will follow the next step...

Thanks again.
//Nechayamaaka Palankidaikkum nanpare. avar kunamadaiya piraarthippom.//

தங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது..
தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே...