பல்வேறு ஆண்களின் ராசி பலன்கள் !

"பல்வேறு பெண்களின் ராசி பலன்களைப் பத்தி சொன்னீங்க ..... அதே மாதிரி ஆண்களைப் பத்தியும் சொல்லலாமே ...." என்று கேட்ட சில நண்பர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் முகமாக இந்தப் பதிவு. (நான் ஜோதிடர் அல்ல. ஆன்மிகப் பதிவர் ராஜராஜேஸ்வரி அம்மா சொன்னது போல இது ஒரு பொதுவான ஆராய்ச்சிப் பார்வை)


"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கின்றாள்" என்று ஒரு சொல் வழக்கு இருப்பது நமக்குத் தெரியும். இதற்கு சற்று முரணாக, "ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே..." என்று மற்றொரு சொல் வழக்கு இருப்பதும் நமக்குத் தெரியும். ஆக பெண்ணின் ராசி ஆணை பாதிக்கும் அல்லது சாதிக்கும் என்று சொல்லலாம். எனினும் அப்படி  ஒரேடியாக ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. ஆணுக்கும் தனிப்பட்ட குணங்களை ஜாதக கிரக அமைப்புகள் ஏற்படுத்துகின்றன. கிரக பெயர்ச்சிகள் மாற்றுகின்றன.

முன்னேற நினைக்கும் ஒரு ஆணின் இலட்சியம் தடையில்லாதொரு நல்ல படிப்பு, அதற்கு ஏற்றதொரு வேலை அல்லது தொழில் அல்லது வணிகம், போதுமான வருமானம், அன்பான மனைவி (கவனிக்க : அழகான மனைவி என்று சொல்லவில்லை. எனினும் வாய்த்தால் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்),  குழந்தைகள், ஒரு வீடு, வாகனம், கொஞ்சம் சேமிப்பு மற்றும் இடர் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு உதவும் சுற்றம். இவற்றை அடைந்து, பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வை ஓட்ட முடிந்து விட்டால் மகிழ்ச்சிதான்.

ஆனால் இந்த ஒவ்வொன்றையும் ஒரு கிரகம் தருவதாக ஜோதிடப் பதிவர்கள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட கிரகம் எந்தக் கட்டத்தில் அமர்ந்து இருக்கின்றதோ அதைப் பொருத்து பலன் மாறுகின்றது. குணம் வேறுபடுகின்றது.

  • பள்ளிப்படிப்பின் போது 'இது பூட்ட கேசு' என்று ஆசிரியரால் பட்டம் கொடுக்கப்பட்ட மாணவன், கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பிறகு படிப்பில் பட்டையை கிளப்புவான்.
  • பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தவன் கல்லூரியில் கோட்டை விடுவான்.
  • படிப்பறிவே மிகவும் குறைவாக இருக்கும் ஒருவன் அருமையாக வியாபாரம் செய்வான். நன்கு பொருளீட்டுவான்.
  • நன்கு படித்து தேர்ச்சி அடைந்திருப்பான். அவன் எதிர்பார்த்த வேலை கிடைக்காது.
  • வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பான். அவனுக்கு திருமணம் என்று ஒன்று ஆகிய பிறகு பொறுப்பாக முன்னேறிக்  கொண்டு வருவான். 
  • நல்ல படிப்பு, நல்ல வேலை, கை நிறைய சம்பாத்தியம். ஆனால் மண வாழ்க்கை சரியாக அமையாது. சண்டை, சச்சரவு, பிரச்சனை, நீதிமன்றம், பிரிவு என வாழ்க்கை பேசித் தீர்க்க முடியாத அளவுக்கு போர்க்களம் ஆகி விடும்.
  • தீய பழக்க வழக்கங்கள் ஏதும் இல்லாத, சுத்தமாக சுகாதாரமாக வாழும்  ஒருவன், திடீரென அல்ப ஆயுளில் நோயால் மடிவான்.
  • எல்லா விதமான பழக்க வழக்கங்களும் ஆல் ரௌண்டராக கொண்ட ஒருவன், அதே பழக்க வழக்கங்களுடன் கொள்ளுப் பேரன்களையும் கண்டு விட்டு மடிவான். 
ஜாதகக் கட்ட கிரகங்கள் காரணமாக ஆண்களின் குணாதிசியம் பல வகையில் அமைந்து விடுகின்றது.
  • முரட்டு சுபாவ ஆண்கள். எதிலும் முன் கோபம், முரட்டுத்தனம். இவர்களை அன்பு ஒன்றைக் கொண்டு மட்டுமே கட்டுப்படுத்த முடியும். பொட்டிப் பாம்பாக அடங்கி விடுவர். அதிகாரம் செய்ய நினைத்தால், எகுறுவார்கள். முரண்பாடு காட்டுவார்கள். புரிந்து கொண்டவர்களுக்கு இவர் ஒரு தெய்வப் பிறவி. இவர்களிடம் நிறைய சாதிக்கலாம்.
  • சாந்த சொரூபி ஆண்கள். இவர்களுக்கு கோபமே வராது. "எல்லாம் பாத்துக்கலாம் போ", என்று அந்த நேரத்துக்கு சமாளிப்பார்கள். அப்படி சரியாக சமாளிக்கவும் செய்வார்கள். 
  • புத்திசாலி ஆண்கள். நல்ல கல்வியுடன், தொழில், குடும்பம் என அமைத்து போதுமென்ற மனதுடன், தான் உண்டு தன்  வேலை, குடும்பம் என்று உண்டு வாழும் மனப்பக்குவத்தை கிரகம் அருளப் பெற்றவர்கள், இவர்கள். அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று எதையாவது செய்கின்றபோது அதற்கே உரிய பிரச்சனைகள் வரவே செய்யும். இவர்கள் எது நம்மால் முடியும், எது முடியாது, எது பயன் தரும், எது பிரச்சனை தரும் என்பதை தனது அறிவால் நன்கு அளவிட்டு வைத்திருப்பார். எனினும் 'ரிஸ்க்' எடுக்காத வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இருக்காது. போதுமென்ற மனம் படைத்த இவர்கள், ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.
  • கலவை ஆண்கள். இவர்கள் முன்கோபம், முரட்டுதனம், சாந்தம் ஆகிய மூன்றையும் கொண்டவர்கள். இவர்கள் அபாயகரமானவர்கள். புரிந்து கொள்வது கடினம். இவர்களின் எந்த செயலுக்கும் இவர்களிடம் பொருத்தமான ஒரு பதில் இருக்கும். அதை மறுத்துரைப்பது கடினம். "எல்லாத்துக்கும் வழி இருக்கு" என்று நம்புபவர்களாக அல்லது நம்பிக்கை தருபவர்களாக இவர்கள் கிரக அமைப்பு இருக்கும்.
  • ஆழ மனது ஆண்கள். பெண்களுக்கு மட்டுமே ஆழமான மனது உண்டு என்று நினைத்தால் அது தவறு. ஆண்களுக்கும் உண்டு. இந்த ஆழ மனது ஆண்கள், நீண்ட கால சாத்திய சிந்தனைகளை செய்வதில் வல்லவர்கள். இவர்களை 'மூடி டைப்' என்று கிரகம் காட்டும்.
  • வள்ளல் ஆண்கள். வள்ளலாக்கும் கிரகம் இவர்களுக்கு நன்கு வேலை செய்யும். பிறருக்கு தருவதற்கென்றே ஆண்டவன் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான்.
  • உதவும் ஆண்கள். கேட்டவர்களுக்கு மறுக்காமல் உதவி செய்பவர்கள். பொருளாக தர முடியாது போனாலும், தனது அறிவால், தொழிலால், செல்வாக்கால் உதவி செய்வார்கள். உதவி செய்யும் இவர்களுக்கு உதவி தேவைப்படும் இக்கட்டான கட்டம் வருகின்ற போது, உதவி கிடைக்காத நிகழ்வும் உண்டு.
  • தொட்டதை பொன்னாக்கும் ஆண்கள். இவர்கள் எது செய்தாலும் அதில் வெற்றி மட்டுமே காண்பர். தொட்டது துலங்கும். கை ராசிக்காரராக இருப்பர். எடுத்த காரியம், வேலை, தொழில், வியாபாரம் என இவர்கள் செய்யும் எதிலும் ஜெயம்தான். இப்படிப்பட்ட ஆண்களை இனம் கண்டு அவர்கள் கையால் எதை மற்றவர்கள் செய்து கொண்டாலும் அது சிறப்பாக அமையும். 
  • அதே நேரத்தில் தன் வாழ்வு சிறப்பாக அமையாத ஆண்களும் உண்டு. ஊருக்கு, உற்றார் உறவினருக்கு நிறைய செய்திருப்பார். ஆனால் அவரது வாழ்வு சொல்லிக் கொள்ளும்படி மகிழ்ச்சியாக இருக்காது. ஏதோ ஒன்று அவர் மனதில் வாழ்நாள் முழுவதும் வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கும்.
  • அப்பாவி ஆண்கள். இப்படி நிறைய பேர் உண்டு. அதிகம் சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அப்பாவியாக இருக்கின்றார்களோ இல்லையோ, அப்படி ஆக்கப்படும் நிகழ்வு அதிகம் நடக்கின்றது. அதாவது "ஏதாவது சொன்ன குத்தமாய்டுமா, செஞ்ச தாப்பாய்டுமா ?" என்ற கேள்விக்கு ஆளாக்கப்பட்டே அப்பாவியாக மாறி விடுகின்றனர். தன் கருத்தை வெளிப்படுத்த முட்டுக்கட்டைக்கு ஆளாபவர்கள், இவர்கள்.
  • வசிய ஆண்கள். இவர்கள் பெண்களை விரும்புகின்றாரோ இல்லையோ, இவர்களை பெண்கள் அதிகம் விரும்புவர்கள். இவர் சினிமா கதாநாயகனாக இருக்க மாட்டார். அல்லது அப்படி ஒரு அழகனாக கூட இருக்க மாட்டார். ஆனாலும் ஏதோ ஒரு வசியம் இவர் முகத்தில் இருக்கும். இவர் வசியப் படுத்த வேண்டும் என்று நினைத்து விட்டால், நிச்சயம் வசியமாக்கி விடுவார்.
  • தோல்வி ஆண்கள். முக்கி முக்கி எதை செய்தாலும் இவர்களுக்கு அதில் தோல்வியே தொடர்ந்து ஏற்படும். எதிலும் தயக்கம், தடுமாற வைக்கும் கிரகங்கள் இவர்களை தடைப்படுத்தும்.
  • துணிச்சல் ஆண்கள். ஒரு ஆணுக்கு இலட்சணம் துணிச்சல். அதாவது தைரியம். எதிலும் தைரியமாக முன்னேறுவார்கள். தகாத துணிச்சல் இவர்களிடம் இருக்காது. இவர்கள் பயப்படுகின்றார்கள் என்றால் எதையோ துணிச்சலாக செய்ய திட்டமிடுகின்றார்கள் என்று கூட பொருள் கொள்ளலாம். 
  • சவடால் ஆண்கள். இவர்களை உதார் விடும் ஆண்கள் என்றும் சொல்லலாம். தாம் தூம் என்று பேசுவார்கள். ஆனால் விஷயம் இருக்காது. பேசுவதற்கு யாரிடமிருந்தாவது விஷயம் பெற்றுக் கொள்வார்கள். பயப்படுத்துவார்கள். ஆனால் 'ரீ-ஆக்ட்' ஆகி விட்டால் என்ன செய்வது என்று பயப்படுவார்கள். 
  • உதவியவர்களை உதறித் தள்ளும் ஆண்கள். நிறைய பேர்களிடம் உதவி கேட்டு படிப்படியாக முன்னுக்கு வந்திருப்பார்கள். ஆனால் பின்னிட்டு உதாசீனப்படுத்துவார்கள். அது மட்டுமல்லாது அவமானப் படுத்துவார்கள்.
  • துரோக ஆண்கள். இவர்கள் மிக மிக அபாயகரமானவர்கள். இவர்களை கூட இருந்து குழி பறிப்பவர்கள் என்று சொல்லலாம். பணத்திற்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள். இவர்கள் கண் எதிரே பணம், பொருள்  மட்டுமே தெரியுமே தவிர, அதற்குரிய ஆள் யார், எவர் என்று சுத்தமாக தெரியாது. அண்டிப் பிழைத்து துரோகம் செய்பவர்கள்.
  • பழி வாங்கும் ஆண்கள். தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை தாங்கிக் கொள்ளும் மன வலிமை படைத்த ஆண்கள்,  அதை அப்படியே மனதில் கொண்டு நிச்சயம் பழி வாங்கி விடுவர். "அடிபட்ட பாம்பு கொத்தம விடாது" என்ற ஆண்கள் இவர்கள். பழி வாங்கும் நேரம் வரும் வரை, தனது வருத்தங்களை நன்கு ஜீரணித்துக் கொண்டே இருப்பார்கள். நிறைய திட்டமிடுவார்கள். அந்த நேரம் வருகின்ற போது, இவர்கள் கண்ணுக்கு எதுவும் தெரியாது. துரோகம் செய்தவன் மட்டுமே இலக்கு. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. வஞ்சம் தீர்த்து விடுவார்கள்.
  • குத்தி விடும் ஆண்கள். இதை மட்டும் ஒரு தனிப் பதிவாக அடுத்த பதிவில் சொல்கின்றேன். இந்த குணாதிசியத்தை பெற்ற ஆண்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே இதற்கு ஒரு தனிப்பதிவு அவசியம்.
இப்படி இன்னும் எத்தனையோ வகையான ஆண்கள் உள்ளனர். எல்லோரும்  கிரக வலிமை, கட்டங்கள், பார்வைகள் காரணமாக தனி குணாதிசியத்தை பெறுகின்றார்கள் அல்லது  மாற்றத்திற்கு உள்ளாகின்றார்கள். 

வழக்கம் போல், தெரிய வைக்கப்பட்ட வரை எழுதி இருக்கின்றேன். ஏதாவது  குத்தம் குறை இருந்த சொல்லுங்க....!

Comments

சொல்லப்பட்டவை சிலது நடக்கும் உண்மைகள்...!

தனிப்பதிவையும் தொடரவும்...
Unknown said…
கண்ணாடியைப்
பார்த்துக் கேட்கிறேன்..!
தைரியம் இருந்தால் உரை...!


இதில் நான் எந்த வகை?
என்று !
அருமையான ஆராய்ச்சிப்பார்வை ..!
தெளிவான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ஆழமான அருமையான விரிவான அலசல்
மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக பெரிய தேடல் .நல்ல் பலன் தரும் .
அலசல் அருமை.தொடருங்கள்
திண்டுக்கல் தனபாலன் said...
//சொல்லப்பட்டவை சிலது நடக்கும் உண்மைகள்...!//

கருத்துரைக்கு நன்றி...
@ரமேஷ் வெங்கடபதி said...
//கண்ணாடியைப்
பார்த்துக் கேட்கிறேன்..!
தைரியம் இருந்தால் உரை...!
இதில் நான் எந்த வகை?
என்று !//

நீங்க திருப்பூர் கண்ட திருப்பு முனை சார்.... ஒரு ஜெம் சார்.....
@இராஜராஜேஸ்வரி said...
//அருமையான ஆராய்ச்சிப்பார்வை ..!
தெளிவான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..//

பின்னூட்டத்திற்கு நன்றி...
@ Ramani S said...
//ஆழமான அருமையான விரிவான அலசல் மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு தொடர வாழ்த்துக்கள்//

மறுமொழிக்கு நன்றி சார்.. எங்கே உங்க கவிதைப் பதிவை சில தினங்களாக காண முடிய வில்லையே..?
@Krishna moorthy said...
//மிக பெரிய தேடல் .நல்ல் பலன் தரும் .//

முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
@கவியாழி கண்ணதாசன் said...
//அலசல் அருமை.தொடருங்கள்//

மிக்க நன்றி ...!!