கணவன்மார்கள் - பாவப்பட்ட ஜென்மங்கள்

கணவனின் நிலை ஒரு ஸ்பிலிட் ஏ.சி.-யைப் போன்றது.
அவுட்டோர் யூனிட்டில் எவ்வளவு சத்தம் வந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் இன்டோரில் எந்த சத்தமும் வராதபடிக்கு அது வடிவமைக்கப்பட்டுள்ளது....
_______________________________________________________________________
"கணவன் என்பவன் குடும்பத் தலைவன்;
ஆனால் மனைவி என்பவள் அவனது கழுத்து.
அவள் எப்படி தனது கழுத்தை திருப்புகிறாளோ  அப்படி அவன் செல்ல வேண்டும்" 
_______________________________________________________________________
நரகத்தில் சென்ற ஒரு கணவன் அங்கிருந்த ஒரு பேயிடம், "உங்களுடைய செல் போனை ஒரு நிமிடம் கொடுத்தால் நான் எனது மனைவியிடம் பேசி விடுவேன்" என்றான்.  அதற்கு அந்தப் பேயும் தனது செல் போனை கொடுத்தது. கணவன் தனது மனைவியிடம் பேசி முடித்து விட்டு, "பேசியதற்கு எவ்வளவு சார்ஜ் தர வேண்டும்" என்று பேயிடம் கேட்டான். அதற்கு அந்தப் பேய், "ஒன்றும் தர வேண்டியதில்லை. நரகம் டூ நரகம் பிரீ" என்றது!
_______________________________________________________________________
கணவன் : கண்ணே.. உனக்கு மனைவி என்பதன் அர்த்தம் தெரியுமா?
மாணவி என்பவள் எந்த மேட்டரும் இல்லாமல் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பவள்.
மனைவி : கண்ணாளா.. மனைவி என்பதற்கு அது பொருள் அல்ல. மனைவி என்பவள் ஒரு முட்டாளுடன் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவள்.
_______________________________________________________________________
மனைவி : நான் ஒரு நியூஸ் பேப்பராக மாற விரும்புகிறேன். நாள் முழுவதும் உங்கள் கையில் தவழ்ந்து கொண்டே இருக்கலாம் பாருங்கள்.. 
கணவன் : நானும் அப்படியே விரும்புகிறேன்.  தினமும் ஒரு புதிய நியூஸ் பேப்பர் கிடைக்கும் இல்லையா?
_______________________________________________________________________
மருத்துவர் : உங்கள் கணவருக்கு அமைதியும் நல்ல ஓய்வும் தேவை. நான் சில தூக்க மாத்திரைகளை எழுதி தருகிறேன்.
மனைவி : நான் அந்த மாத்திரைகளை எப்பொழுது அவருக்கு தர வேண்டும்?
மருத்துவர் : அந்த மாத்திரைகள் உங்களுக்கு......!
_______________________________________________________________________

Comments