சுய மதிப்பீட்டுக்கு வழி

கடை வீதியில் இருக்கும் ஒரு பொதுத் தொலைபேசியில்  ஒரு  சிறுவன் நாணயம் போட்டு சில எங்களை சுழற்றினான். மறு முனையில் ஒரு பெண்மணியின் குரல் ஒலித்தது. உடனே அவன் பேச ஆரம்பித்தான். இந்த உரையாடலை அருகில் இருந்த கடை உரிமையாளர் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்.

சிறுவன் : அம்மா, நான் உங்கள் வீட்டு புல்வெளியை (lawn) வெட்டி அழகு படுத்தும்  பணியை எனக்கு  கொடுப்பீர்களா?

பெண்மணி : அந்தப் பணியை செய்ய ஏற்கனவே ஒரு ஆளை வைத்து இருக்கிறேனே...

சிறுவன் : அம்மா, அந்த ஆளுக்கு நீங்கள் கொடுக்கும் கூலியில் பாதியை மட்டும் எனக்கு கொடுத்தல் போதும். நான் நன்றாக புல்லை வெட்டி சீர் செய்து விடுவேன்..

பெண்மணி : இப்போது புல்லை வெட்டிக்கொண்டிருக்கும் ஆள் செய்யும் பணியில் எனக்கு முழு மன நிறைவு உள்ளது. எனவே எனக்கு இப்போது  வேறு ஆள் தேவையில்லை.

சிறுவன் : (கெஞ்சும் குரலில்) புல்லை வெட்டுவதுடன் நான் உங்கள் வீட்டு தரையையும் படிக்கட்டுகளையும் இலவசமாக செய்து தருகின்றேன். அதற்கு நீங்கள் கூலி ஏதும் தரவேண்டாம்.

பெண்மணி : வேண்டாம் தம்பி. இங்கே ஏற்கனவே ஒரு நல்ல ஆள் இருக்கிறான்.

இதை கேட்டு  விட்டு முகத்தில் ஒரு மெல்லிய   புன்சிரிப்புடன்  அச்சிறுவன் தொலைபேசி இணைப்பை மெல்லமாக துண்டித்துக் கொண்டான்.

இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர், அச்சிறுவன் மீது பரிதாபப்பட்டு, "தம்பி உன் தொலைபேசி உரையாடலை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.  உன் அணுகுமுறையும் நேர்மறை சிந்தனையும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. உனக்கு என் கடையில் ஏதாவது வேலை போட்டு கொடுக்கட்டுமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன், "வேண்டாம் அய்யா. உங்கள் அன்புக்கு நன்றி" என்றான்.
ஆனால் அந்த கடைக்காரர் விடவில்லை. "தம்பி நீ வேலை வேண்டும் என்பதற்காக தொலைபேசியில் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தாயே? " என்று அவர் கேட்டார்.

அதற்கு அச்சிறுவன், "உண்மைதான் அய்யா. ஆனால் நான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் பணியை எவ்வளவு நன்றாக செய்து கொண்டிருக்கிறேன் என்று பரிசோதனை செய்து கொண்டிருதேன்" என்றான்.

"நீ சொல்வது எனக்கு சரிவர விளங்கவில்லையே?" என்று அக்கடைக்காரர் சற்றே புருவத்தை உயர்த்தி வியப்புடன்  கேட்டார்.

அதற்கு அவன், "நான் தொலைபேசியில் உரையாடி கொண்டிருந்த  அந்தப் பெண்மணியிடம் ஏற்கனவே புல் வெட்டும் வேலை செய்து கொண்டிருக்கும் அந்த ஆளே நான்தான்" என்றான்.

இதுதான் "சுய மதிப்பீடு" என்பது.

கனவுக்கும் இலட்சியத்திற்கும் உள்ள வேறுபாடு யாதெனில் -
கனவு காண ஆழ்ந்த நித்திரை வேண்டும்!
ஆனால் இலட்சியத்தை அடைய நித்திரை இல்லாத முயற்சி வேண்டும்!!

வாழ்க.

Comments